தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் சேமிப்புக் குறைப்பு ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் கடினமானதாக மாறும் என்றும் சந்திரலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.