இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பல கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், 2.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம்.