சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கே வரி விதிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது
இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.