இலங்கையின் கலால் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது.
போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுவிடமிருந்து மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமையவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.