மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகம் தற்போது மிக பதட்டமான காலகட்டத்தில் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல்கள் நடந்த பின்னர், ஈரான் பதிலடி கொடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து 90 டாலர் அளவிற்கு சரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.