வேத ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல கிரகங்களின் ராசி மாற்றங்களால் மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்கவுள்ளது. அவற்றில் ஒன்று – மகாலட்சுமி ராஜயோகம், இது சுமார் 18 மாதங்கள் கழித்து (அதாவது 2027 மத்தியில்) முழு விளைவை ஏற்படுத்தத் தொடங்கும்.
சுக்கிரனின் இந்த முதல் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உருவாக்கி, குறிப்பாக பண வரவு, வாழ்க்கைத் தரம் மற்றும் உறவுகளில் எதிர்பாராத முன்னேற்றங்களைத் தரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.