ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடங்கி நான்காவது ஆண்டை எட்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, கடும் குளிர் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட நகரங்களை தற்காலிகமாக தாக்க வேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதித்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனை கிரெம்லின் உறுதிப்படுத்தியிருந்தாலும், விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.