ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.