ரஷியா மீது உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயுதக் கிடங்கு மற்றும் எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்.
கியேவிலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருநாடுகளின் குழுவினரும் வெள்ளியன்று காணொலியில் பேச்சு நடத்த உள்ளதாக உக்ரைன் குழுவின் தலைவர் டேவிட் அரக்காமியா தெரிவித்துள்ளார்.