ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்றும், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.