இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரிவாக மீளாய்வு செய்து, அவற்றுக்கு பொருத்தமான மற்றும் முறையான தீர்வுகளைப் பரிந்துரைப்பதே, இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பணியாகும்.
இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் அவற்றை விடுவிக்கத் தவறியதால், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.