இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்; 203 பேர் காணாமல் போயுள்ளனர். 8.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.2 இலட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நில்வலா ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நில்வலா கங்கையை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.