கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பாலூர் காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெனிட்டா ஜெய அன்னாள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூரைச் சேர்ந்த 21 வயதான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெனிட்டா ஜெய அன்னாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ந் தேதி இரவு கார்த்திக் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது மனைவியிடம் கேட்டபோது, குழந்தை பாலூட்டும் போது தவறி கீழே விழுந்து காயமடைந்ததாக பெனிட்டா ஜெய அன்னாள் கூறியுள்ளார்.
உடனடியாக கார்த்திக் குழந்தையை மீட்டு கருங்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கார்த்திக் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பொலிஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையின் தாயான பெனிட்டா ஜெய அன்னாளைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையின் போது, குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து பெனிட்டா ஜெய அன்னாள் பொலிஸாரிடம் பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார். "எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அன்றிலிருந்து என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தைதான் என்ற ஆத்திரத்தில், சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன்" என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பொலிஸார் பெனிட்டா ஜெய அன்னாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது. "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது. சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார். ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்: 'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது. 'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பாலூர் காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெனிட்டா ஜெய அன்னாள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூரைச் சேர்ந்த 21 வயதான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெனிட்டா ஜெய அன்னாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ந் தேதி இரவு கார்த்திக் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது மனைவியிடம் கேட்டபோது, குழந்தை பாலூட்டும் போது தவறி கீழே விழுந்து காயமடைந்ததாக பெனிட்டா ஜெய அன்னாள் கூறியுள்ளார். உடனடியாக கார்த்திக் குழந்தையை மீட்டு கருங்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திக் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பொலிஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் தாயான பெனிட்டா ஜெய அன்னாளைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையின் போது, குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து பெனிட்டா ஜெய அன்னாள் பொலிஸாரிடம் பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார். "எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அன்றிலிருந்து என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தைதான் என்ற ஆத்திரத்தில், சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன்" என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பொலிஸார் பெனிட்டா ஜெய அன்னாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷினாவத்ரா, மருத்துவமனையில் 'விஐபி' பிரிவில் தங்கியிருந்தது சட்டவிரோதம் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து, அவர் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஷினாவத்ரா குடும்பத்திற்கு இது ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. தக்ஸினுக்கு கடுமையான நோய் இல்லை என்றும், அவரது மருத்துவமனை வாசம் தண்டனைக் காலமாக கருதப்படாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இதன் பொறுப்பு மருத்துவர்களிடம் மட்டுமல்ல, செல்வாக்கு மிக்க கோடீஸ்வரரான தக்ஸின் வேண்டுமென்றே தனது மருத்துவமனை தங்குதலை நீட்டித்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. தீர்ப்பு வெளியானதும், தக்ஸின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், பலமாக இருப்பதாகவும் தக்ஸின் தெரிவித்தார். "இன்று, எனக்கு சுதந்திரம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சிந்தனை சுதந்திரம் எனக்கு உண்டு" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார். ராம்பூர் என்ற இடத்தில் வசிக்கும் சுக்ராம் என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த மேகா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலிக்க ஆரம்பித்து காதலனுடன் ஓடிவிட்டார். இதனையடுத்து, மனைவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அவரை வீட்டிற்கு கணவன் அழைத்து வந்தார். சுக்ராம் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரது மனைவி அடிக்கடி தனது காதலனை தேடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் சுக்ராம் சென்று தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதும், மேகா மீண்டும் காதலனுடன் ஓடுவதும் தொடர்கதையாக மாறிவிட்டது. கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்ட அந்தப்பெண், கடைசியாக, கடந்த 8 நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடிவிட்டார். இம்முறை சுக்ராம் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று, இது தொடர்பாக புகார் அளித்துடன், தனது மனைவிமீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், தன்னிடம் அழைத்து வந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், அப்பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்த பொலிஸார் அவரை அழைத்து வந்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்தனர். ஆனால் அடுத்த நாளே மீண்டும் மேகா தனது காதலன் வீட்டிற்கே சென்றுவிட்டார். உடனே சுக்ராம் மீண்டும் மேகா இருக்கும் அவரது காதலன் வீட்டிற்கு சென்று, தன்னுடன் வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மேகா இம்முறை "வரவே மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, வேறு வழியில்லாமல் சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டி தனது பிரச்சினையை தெரிவித்தார். பஞ்சாயத்தார் மேகாவிடம் இது குறித்து பேசினர். கணவனுடன் வாழும்படி பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு மேகா சம்மதிக்கவில்லை. சுக்ராம், தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இதனால், இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் பஞ்சாயத்தார் தலையைப் பிய்த்துக்கொண்டனர். அந்த நேரத்தில், மேகா இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனது காதலனுடனும் கணவனுடனும் மாறி மாறி வாழ்வதாக மேகா தெரிவித்தார். மேகா தெரிவித்த முடிவை கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முடிவு புதிதாக இருந்தாலும், அதை எவ்வாறு அமல்படுத்துவது என்று பஞ்சாயத்தார் குழம்பினர். மேகாவின் கணவனிடம் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறாயா என்று பஞ்சாயத்து பெரியவர்கள் கேட்டனர். தனது மனைவியின் முடிவை கேட்டு அதிர்ச்சியில் இருந்த சுக்ராம், கைகளை இணைத்து கும்பிட்டு, "எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.