முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை நீக்கும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த "ஜனாதிபதியின் சலுகைகள் (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு" ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. சபாநாயகர் கையொப்பமிட்டவுடன் இந்தச் சட்டம் அமுலுக்கு வரும்.
இதன் மூலம் முன்னாள் அரச தலைவர்களுக்கு அரசு வழங்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ரத்து செய்யப்படும்.
இந்தச் சட்டமூலத்தின் மையமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் குறித்த விவாதம் இருந்தது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்த இல்லத்தைப் பராமரிப்பதற்கான அதிக பொதுச் செலவு குறித்து கேள்வி எழுப்பினார். ராஜபக்ஷவின் இல்லத்தின் மாதாந்த வாடகை மதிப்பு மட்டும் 4.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருந்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
புதிய சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ முன்னர் முறைப்படி கோரப்பட்டால் காலி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று கண்டித்துள்ளனர்.
மறுபுறம், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தற்போது அரசுக்குச் சொந்தமான இல்லங்களில் வசிக்கவில்லை, அவர்கள் ஏற்கனவே தனியார் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த ரத்துச் சட்டமூலம் முன்னாள் தலைவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக மீண்டும் ஒதுக்கும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், நேற்று இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது பதிவாகியுள்ளது. ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும், தாய்தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் திருவிழா நடாத்தப்படுகின்றது. ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி உள்வீதியுலா மற்றும் வெளிவீதியுலா வந்த பின்னர் மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது, திருவிழாவிற்குப் பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. இளையதம்பி தவாகரன் என்ற அடியார் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் ஏலத்தொகையினைக் கொடுத்து இந்த மாம்பழத்தை வாங்கிக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 09) பிணை வழங்கியுள்ளது. அவர் இன்று காலை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, ஓகஸ்ட் 29 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சேனாரத்ன, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கொன்றுடன் தொடர்புடையதாக செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்று ( 7) உயிரிழந்துள்ளது. சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் - லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயார் குழந்தைக்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம் 1.30 மணியளவில் குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பியபோது குழந்தை வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது. இந்தநிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.