பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை நடுவே நோயாளியை விட்டுவிட்டு, செவிலியருடன் தகாத உறவில் ஈடுபட்ட மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சுஹைல் அஞ்சும், 2023 ஆம் ஆண்டில் Tameside பொது மருத்துவமனையில் பணிபுரிந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த நிலையில், அந்த நோயாளியை விட்டுவிட்டு, மற்றொரு அறையில் ஒரு செவிலியருடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அஞ்சும், தனது இந்தச் செயலை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் அந்தச் செவிலியரும் தகாத நிலையில் இருந்தபோது மற்றொரு செவிலியரால் பிடிபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் உடனடியாக மருத்துவமனையின் மேலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அஞ்சும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று அங்கு பணியாற்றத் தொடங்கினார்.
இச்சம்பவம் பிரித்தானிய மருத்துவ தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், அஞ்சுமின் செயல் "கேவலமான தவறு" என்று கருதப்பட்டது. இருப்பினும், இந்தத் தவறு மீண்டும் நடைபெறும் அபாயம் குறைவாக இருப்பதால், அவருடைய மருத்துவத் தகுதி பாதிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் தீர்மானித்தது.
இதனால், அவருக்கு மீண்டும் பிரித்தானியாவில் மருத்துவப் பணியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது பதிவு மீது இரண்டு ஆண்டுகளுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை இடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நோயாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவ அறையில் நடந்த இச்செயல் மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது. "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது. சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார். ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்: 'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது. 'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை நடுவே நோயாளியை விட்டுவிட்டு, செவிலியருடன் தகாத உறவில் ஈடுபட்ட மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சுஹைல் அஞ்சும், 2023 ஆம் ஆண்டில் Tameside பொது மருத்துவமனையில் பணிபுரிந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த நிலையில், அந்த நோயாளியை விட்டுவிட்டு, மற்றொரு அறையில் ஒரு செவிலியருடன் உறவில் ஈடுபட்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அஞ்சும், தனது இந்தச் செயலை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் அந்தச் செவிலியரும் தகாத நிலையில் இருந்தபோது மற்றொரு செவிலியரால் பிடிபட்டுள்ளனர். இந்த விவகாரம் உடனடியாக மருத்துவமனையின் மேலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அஞ்சும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று அங்கு பணியாற்றத் தொடங்கினார். இச்சம்பவம் பிரித்தானிய மருத்துவ தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், அஞ்சுமின் செயல் "கேவலமான தவறு" என்று கருதப்பட்டது. இருப்பினும், இந்தத் தவறு மீண்டும் நடைபெறும் அபாயம் குறைவாக இருப்பதால், அவருடைய மருத்துவத் தகுதி பாதிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் தீர்மானித்தது. இதனால், அவருக்கு மீண்டும் பிரித்தானியாவில் மருத்துவப் பணியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது பதிவு மீது இரண்டு ஆண்டுகளுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை இடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நோயாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவ அறையில் நடந்த இச்செயல் மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க தனது நாயைப் பதிவு செய்ததாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த 62 வயது லாரா யூரக்ஸ் (Laura Yourex) என்ற பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவே யூரக்ஸ் இவ்வாறு செய்ததாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் 2021 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆளுநர் தேர்தலுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. தேர்தலுக்குப் பின்னர், லாரா யூரக்ஸ் "நான் வாக்களித்தேன்" (I voted) என்ற ஸ்டிக்கருடன் தனது நாயின் படத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டு தனது நாய் இறந்துபோன பின்பும், அதற்கு வாக்களிக்க வாக்குச்சீட்டு வந்திருப்பதாகவும் அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்தார். இந்தப் பதிவுகளுக்குப் பிறகு, லாரா யூரக்ஸ் தாமாகவே அதிகாரிகளிடம் சென்று நடந்த உண்மையை ஒப்புக்கொண்டார். லாரா யூரக்ஸ் மீது பொய் சொன்னது மற்றும் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனின் பெயரை 'போர் துறை' (Department of War) என மாற்றுவதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்றம் அமெரிக்க இராணுவத்தின் "வலிமை மற்றும் உறுதிப்பாட்டை" வெளிப்படுத்தும் என அவர் கருதுகிறார். டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, 'பாதுகாப்புத் துறை' (Department of Defense) என்பது தற்காப்புத் திறன்களை மட்டுமே வலியுறுத்துகிறது, ஆனால் 'போர் துறை' என்ற பெயர் "தயார்நிலை மற்றும் உறுதிப்பாடு" பற்றிய வலுவான செய்தியைத் தெரிவிக்கிறது. பென்டகன், 1789 இல் நிறுவப்பட்டு 1947 வரை செயல்பட்ட போர் துறையின் (War Department) வாரிசு ஆகும். இந்த நிர்வாக ஆணையின்படி, பாதுகாப்புத் துறைக்கு 'போர் துறை' என்ற புதிய பெயர் ஒரு இரண்டாம் நிலைப் பெயராகப் பயன்படுத்தப்படும். மேலும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் 'போர்ச் செயலர்' (Secretary of War) என்று அழைக்கப்படுவார் என்றும் டிரம்ப் உத்தரவிடுவார். டிரம்ப் இதற்கு முன்னர் இந்தப் பெயர் மாற்றம் குறித்து பேசியுள்ளார், முந்தைய 'போர் துறை' என்ற பெயரின் கீழ் அமெரிக்கா இரண்டு உலகப் போர்களிலும் "நம்பமுடியாத வெற்றி வரலாற்றைக்" கொண்டிருந்தது என்று அவர் வாதிட்டார். நிர்வாகத் துறைகளை உருவாக்குவது அமெரிக்க காங்கிரஸின் பொறுப்பு என்பதால், சட்டரீதியான பெயர் மாற்றத்திற்கு ஒரு திருத்தம் தேவைப்படும். இருப்பினும், டிரம்ப், காங்கிரஸ் இந்த மாற்றத்தை ஆதரிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். "இதற்கு தேவைப்பட்டால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கடந்த வாரம் கூறினார்.