ப.பிறின்சியா டிக்சி
News Editor
ப.பிறின்சியா டிக்சி
இலங்கையின் கிராமப்புறங்களில், உள்ளூராட்சி மன்றங்களில் இப்போது ஒரு புதிய குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து, மூன்று மாதங்கள் கடந்து விட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்கள் தங்கள் பதவியை ஏற்றுக்கொண்டு, தங்கள் சமூகங்களின் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இலங்கையின் கிராம அரசியலில் ஒரு காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் நடைபெற்ற தேர்தலாக இருந்தது. அதிலும், பல பெண்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதால் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் பெண் வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்து இருந்தனர்.
தேர்தலுக்கு முன்னர், அனைத்துக் கட்சிகளிலும் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் அறிக்கைகள் ஒரே மாதிரியான கருப்பொருள்களைச் சுற்றியே இருந்தன, குடும்ப நலன், பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக மக்களுக்கு அவர்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். அவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றமையால், அவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்று, உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேர்தல் நிறைவடைந்து உள்ளூராட்சி சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த வாக்குறுதிகள் நடைமுறைத் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளனவா அல்லது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தற்போது கேள்வியாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெற்ற நிலையில், உள்ளூராட்சி மன்றத்திலும் வெற்றியை பெறும் நோக்கில் அக்கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர். அதிலும் குறிப்பாக “பெண்களின் நிலையை மாற்றுவோம்” என்பதே பெண் வேட்பாளர்களின் வாக்குறுதியாகக் காணப்பட்டது.
“நாங்கள் நாடாளுமன்றத்தை மாற்றினோம். இப்போது, உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் அமைப்பை மாற்றுவது அவசியம். அந்த மாற்றத்தைச் செய்ய மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என தேர்தல் பிரசாரத்தில் கூறிய வ்ராய் கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) இப்போது கொழும்பு மாநாகர சபையின் மேயராக உள்ளார்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 48 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 13 உறுப்பினர்களையும் பொதுஜன பெரமுன 05 உறுப்பினர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களையும் சுயேட்சை குழு இலக்கம் 3 மூன்று உறுப்பினர்களையும் சர்வஜன அதிகாரம் 02 உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர்.
இதனால், பல்வேறு உள்ளூராட்சி சபைகளின் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்பட்டதைப் போல கொழும்பு மாநாகர சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், காணப்பட்டதுடன், மேயர் பதவியைக் கைப்பற்ற ஆளும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பாரிய போட்டியொன்று நிலவியது.
இந்த நிலையில், உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக கொழும்பு மாநகர சபை மேயராக வ்ராய் கெலி பால்தசார் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தியான எமக்கும் இது மிகப்பெரிய வெற்றி. எமது வேலைத்திட்டத் நடைமுறைப்படுத்த மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளேன். எமக்குள்ள உறுப்பினர் பலத்துடன் கொழும்பு மக்களுடன் இணைந்து நகரை அழகுப்படுத்தவும், இங்குள்ள பிரச்சினைகளை கூடிய விரைவில் தீர்ப்பதற்கும் நாம் வாக்குறுதியளித்தபடி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ரோசி சேனாநாயக்கவுக்கு பின்னர் கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பெண் மேயராக வ்ராய் காலி பால்தசார் தெரிவாகியுள்ள நிலையில், கொழும்பில் உள்ள பெண்களுக்கு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொள்ள அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பெண்கள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, கொழும்பு மாநாகர சபைக்கு உள்ள நிலையில், மேயராக பெண் ஒருவர் தெரிவாகியுள்ளதால், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும், உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, நிர்வாகத்திலும், சில சமயங்களில் சமூகத்திலும் உள்ள பழமைவாத மனநிலையாகும். சில மூத்த ஆண் உறுப்பினர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கருதுகிறார்கள். ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் நலனே முழு குடும்பத்தின் நலன். இதைப் புரிந்துகொள்வதில் தான் சிக்கல் நிலை உள்ளது என்கிறார் கிழக்கு மாகாணத்தில் இம்முறை உள்ளராட்சி மன்றத்துக்கு தெரிவான பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர்.
“நிதி என்பது மற்றொரு பெரிய தடையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியின் நிழல் இன்னும் முழுவதுமாக நாட்டை விட்டு அகலவில்லை. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான சிறப்புத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வது ஒரு போராட்டமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
வீதி புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு எளிதில் நிதி கிடைப்பதுடன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அதற்கு இலகுவாக கிடைத்துவிடும். ஆனால், பெண்கள் பாதுகாப்பு விடுதி அமைப்பதற்கான திட்டமோ, அல்லது சிறுமிகளுக்கான சுகாதார பொருட்களை வழங்குவதற்கான திட்டத்துக்கு இலகுவாக நிதி அல்லது அனுமதி கிடைத்துவிடுவதில்லை.
“இத்தனை வருடங்களாக வாக்களித்து வந்துவிட்டோம். இந்த முறை பெண்களுக்கு வாக்களிக்க எமக்கு வாய்ப்புக் கிடைத்தது. எமது பிரச்சினைகளை ஆண்களை விட பெண்கள் அதிகளவில் தெரிந்தவர்கள் என்பதாலும், அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும் என்பதாலும், நாம் பெண்களுக்கு வாக்களித்தோம். கொடுத்த வாக்குறுதிகளை மறக்காது மக்களுக்கு சேவை செய்ய அவர்கள் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் இது இன்னுமோர் ஏமாற்றம் என்ற நிலையில் எமக்கு கடந்து செல்ல நேரிடும்” என்கிறார் மட்டக்களப்பை சேர்ந்த மல்லிகா குமார்.
இவ்வாறு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், பெண் உறுப்பினர்கள் தமது சபைகளில் மக்களுக்காக குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளதை செய்திகள் ஊடாக பார்க்க முடிகின்றது. ஆனால், வெறும் செய்திகள், அறிக்கைகள் என்பன மட்டும் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விடாது.
கொழும்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பஸ் சேவையொன்று அண்மையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது, உறுப்பினர்களை அழைத்து, பதாதைகள் வைத்து, ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டமை பல்வேறு தரப்பினரால் விமர்ச்சிக்கப்பட்டது. பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது முக்கியமானது என்றாலும், அதனை சாதாரணமாக செய்வதை விடுத்து, தேவையற்ற விதத்தில் பணத்தை வீணடிப்பது தேவையற்றது என சமூக ஊடகங்களில் விமர்ச்சிக்கப்பட்டன.
முன்னரை போல இல்லாமல் இளைஞர், யுவதிகள் அனைத்து உறுப்பினர்களையும் அவதானித்து வருவதால், அவர்கள் செய்யும் தவறுகள் பொதுவெளிக்கு விரைவில் வந்துவிடும் நிலையொன்று இப்போது காணப்படுவதால், மக்களின் தேவை அறிந்து காத்திரமான முறையில் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.
சில உறுப்பினர்களின் தேவையற்ற செயற்பாடுகள் கூட உள்ளூராட்சி மன்றங்கள் மீதான நம்பிக்கையின்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுவிடும் அபாயம் உள்ளது.
எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்து தற்போது மூன்று மாதங்களே கடந்துள்ளதாலும், அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்க சுமார் ஒரு மாதகாலம் தாமதம் ஏற்பட்டதாலும், அந்த சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் பூரணமாக தகவல்களை அல்லது செயற்பாடுகளை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனினும், இன்னும் நீண்ட காலம் உள்ளதால், மக்களின் தேவைகளை நிறைவேற்ற அந்த சபைகளுக்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில், பெண் உறுப்பினர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா, அல்லது மரபார்ந்த அரசியல் அமைப்பின் சிக்கல்களில் சிக்கிக்கொள்வார்களா என்பது கண்டறியப்பட வேண்டியது.
எனினும், கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவத்துவதற்கான வாய்ப்பு இப்போது பெண்களுக்கும் கிடைத்துள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. அத்துடன், வாக்களித்ததுடன் தமது கடமை நிறைவடைந்தது என்று நினைக்காமல் உள்ளூராட்சி மன்றங்களில் செயற்பாடுகளை மக்கள் அவதானித்து குறை - நிறைகளை சுட்டிக்காட்ட முன்வரவேண்டும். அப்போதுதான் உள்ளூராட்சி மன்றங்களின் பயனை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.