17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 முதல் 28 வரை துபாயில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டெம்பர் 10 ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14 பாகிஸ்தானையும், 19 ஓமனையும் எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் அந்த அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் துணை கேப்டன் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த அணியில் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சிராஜ் ஆகியோரை தேர்வு செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன், சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி. இதனால் அபிஷேக் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் அல்லது சுப்மன் கில் இருவரில் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்குவது யார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் தொடக்க ஜோடியாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மாவை தேர்வு செய்துள்ள அவர் சஞ்சு சாம்சனை 5-வது வரிசை பேட்ஸ்மேனாக தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.
கொழும்பு (News21Tamil) - முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் 2022 மே 09ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் நீதிமன்றைக் கோரியிருந்தார். எனினும், அவரது முன்பிணை கோரிக்கையை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்தார். இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 முதல் 28 வரை துபாயில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டெம்பர் 10 ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14 பாகிஸ்தானையும், 19 ஓமனையும் எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் அந்த அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் துணை கேப்டன் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அணியில் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சிராஜ் ஆகியோரை தேர்வு செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி. இதனால் அபிஷேக் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் அல்லது சுப்மன் கில் இருவரில் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்குவது யார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் தொடக்க ஜோடியாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மாவை தேர்வு செய்துள்ள அவர் சஞ்சு சாம்சனை 5-வது வரிசை பேட்ஸ்மேனாக தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் விளக்கம் அளித்துள்ளார். பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகின்றார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார்.