விளையாட்டு

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

Admin ஆகஸ்ட் 18, 2025 0

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் விளக்கம் அளித்துள்ளார்.

பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகின்றார்.

டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். 

தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன்.

டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார்.

 

Tags

Mike-Hesson babar-azam ஆசிய-கோப்பை-2025 பாபர்-அசாம்
Popular post
குழந்தையை பிரசவிக்கும் ரோபோக்களை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்!

பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள்  கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர்.   இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.

மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கை இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று தொடங்கியது.   எனினும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணை 25 ஆம் திகதி தொடங்கும்.   இன்று (18) தொடங்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 07 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலவரம்

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.    காலையில் சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.    அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறன.

ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எகிறியது

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும்.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.  அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

8 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியாவில் வரிக் குறைப்பு

எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.   இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும்.   அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.   நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

விளையாட்டு

View more
ஆசிய கோப்பை: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. முன்னாள் வீரர் அதிரடி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.  குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் டி20 தொடர் என்பதால், இந்த அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் 3-ம் இடத்தில் திலக் வர்மாவையும், 4-ம் இடத்தில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார். இருப்பினும் அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார். ஹர்ஷா போக்லே தேர்வு செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்.

Admin ஆகஸ்ட் 18, 2025 0

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

0 Comments