உலகம்

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்கும் இங்கிலாந்து!

Admin ஆகஸ்ட் 18, 2025 0

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீட்டித்துவரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

 

அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

 

அத்துடன், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு இன்று திங்கட்கிழமை (18) செல்கிறார்.

 

இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். 

 

அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது, “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

 

“கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

 

“உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புதினை தடுப்பது முக்கியம்.

 

“உக்ரைன் மீதான கொடூரத் தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கெனவே தண்டனையாக அமைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.

Tags

Keir-Starmer Putin கெய்ர்-ஸ்டார்மர் புதின் இங்கிலாந்து வெள்ளை-மாளிகை அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன்
Popular post
குழந்தையை பிரசவிக்கும் ரோபோக்களை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்!

பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள்  கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர்.   இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.

மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கை இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று தொடங்கியது.   எனினும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணை 25 ஆம் திகதி தொடங்கும்.   இன்று (18) தொடங்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 07 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

8 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியாவில் வரிக் குறைப்பு

எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.   இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும்.   அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.   நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எகிறியது

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும்.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.  அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலவரம்

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.    காலையில் சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.    அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறன.

உலகம்

View more
குழந்தையை பிரசவிக்கும் ரோபோக்களை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்!

பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள்  கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர்.   இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.

Admin ஆகஸ்ட் 18, 2025 0

நியூயார்க் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; மூவர் கொலை!

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்கும் இங்கிலாந்து!

மழை

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

8 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியாவில் வரிக் குறைப்பு

எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.   இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும்.   அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.   நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

Admin ஆகஸ்ட் 17, 2025 0

0 Comments