இலங்கை

அடுத்த சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Admin ஆகஸ்ட் 21, 2025 0
வானிலை

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Tags

இடியுடன்-கூடிய-மழை வானிலை
Popular post
சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

இலங்கைக்கு வந்த 15 வயது துணை விமானி!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17)  வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். 

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று (19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கழிவறையில் பெண் பயணி; கதவைத் திறந்து பார்த்த விமானி - விமானத்தில் நடந்த சம்பவம்

இண்டிகோ விமானத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.  விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

இலங்கை

View more
பொரளையில் தாழிறங்கிய வீதி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

பொரளை மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்கு செல்லமுடியும். அத்துடன், ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கொட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம்.  கொழும்பிலிருந்து மொடல் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கொட்டா வீதி ஊடாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதிக்குள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Admin ஆகஸ்ட் 21, 2025 0
தேசபந்து தென்னகோன்

தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் முன்னிலை

வானிலை

அடுத்த சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கொலை வழக்கில் துப்பாக்கிதாரி கைது

கட்டுநாயக்கவில் 1,338 சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், கடந்த 3ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ரூ. 2,000 என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. குறித்த நடைமுறை காரணமாக, அந்தத் தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.

Admin ஆகஸ்ட் 20, 2025 0

தேசபந்து தென்னகோன் கைது!

ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

புதிதாக 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்து வேலைவாய்ப்பு வழங்குகிறது!

மழுங்கிய ஆயுதத்தால் அடித்துக் ஒருவர் கொலை

பேலியகொட, வெடமுல்ல பகுதியில் ஒருவர் மழுங்கிய ஆயுதத்தால் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (19) மாலை பேலியகொட பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களனி, வெடமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே உயரிழந்துள்ளார். விசாரணையில், இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Admin ஆகஸ்ட் 20, 2025 0

பல பகுதிகளில் மழை இல்லாத வானிலை

Shasheendra Rajapaksa further remanded

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

துப்பாக்கிச்சூடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

0 Comments