மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் பதிலடி நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது நிலையை மோசமாக்கியது.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
2 வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் சம்மதம் தெரிவித்திருந்தன.
இருநாடுகளும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன.
போர் நிறுத்தத்தை மீறி ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக குவைத் குற்றஞ்சாட்டியது.
இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன.